Friday, April 9, 2010

கவிதையா என்ன???

மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்த பொழுது தோன்றிய  சிந்தனைகள் இவை... இவற்றை "கவிதைகள் " என்று பெயரிட்டு கவிதைகளை சிறுமை படுத்த விரும்பவில்லை:-D
அவை, தங்கள் பார்வைக்கு...

*தானே முன்வந்து குடிநீரை மந்திரித்துக் கொடுத்த "uncle"...
சிறு வயதில் நான் தாடியை பிடித்து இழுத்தாலும், சிரித்து கொஞ்சும்
"பாய் தாத்தா"வை ஏன் நினைவு படுத்தினார் என தெரியவில்லை...


*மருத்துவமனை வாசம் முடிந்தது...
"எப்ப கண்ணு காலேஜ் போற?" - இது தந்தை...
"உடம்ப நல்ல தேத்திட்டு காலேஜ் பத்தி யோசி டி" - இதுதான் தாய்...


*நெற்றியில் சாய் பாபா திருநீர்...
புட்டியில் சாயுபு மந்திரித்த குடிநீர்...
தெய்வத்திற்கு  தான் எவ்வளவு பரிவு?



* 22 வயதானாலும்,
முதுகலை படித்தாலும்,
சென்னையில் வசித்தாலும்,
வாகனங்கள் அற்ற சாலையை கடக்கக் கூட ஓடும் போது தெரிந்தது...
எனக்குள் இன்னும் இருப்பது கிராமத்து சிறுமி தானென்று...


*விழிகள் மட்டுமே தீண்டிக் கொள்ளும்
கிராமத்து காதல்களைக் கண்டவளுக்கு,
பொது இடங்களில் கூட அணைத்தவாறே செல்லும்
சென்னைக் காதல்,
அந்நியம்தான்...

5 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. /* 22 வயதானாலும்,
    முதுகலை படித்தாலும்,
    சென்னையில் வசித்தாலும்,
    வாகனங்கள் அற்ற சாலையை கடக்கக் கூட ஓடும் போது தெரிந்தது...
    எனக்குள் இன்னும் இருப்பது கிராமத்து சிறுமி தானென்று...


    *விழிகள் மட்டுமே தீண்டிக் கொள்ளும்
    கிராமத்து காதல்களைக் கண்டவளுக்கு,
    பொது இடங்களில் கூட அணைத்தவாறே செல்லும்
    சென்னைக் காதல்,
    அந்நியம்தான்...*/

    super..!

    ReplyDelete
  3. thanks for the criticism Mr.Citizen :)
    I knew the disaster my work would cause and hence titled it accordingly ;)

    ReplyDelete

Pages