Showing posts with label தேடல். Show all posts
Showing posts with label தேடல். Show all posts

Sunday, April 4, 2021

முதிர்வு


தலையின் நரையும்

தோலின் திரையும்

முதுகின் மூப்பும்

மானுட வாழ்வின்

நிறைக்குக் குறிகைகள்.


எளியோரின் எளிமையும்

வலியோரின் வலிமையும்

கானலேயெனக் காட்டும்

மூப்பும் இறப்பும்

இயற்கை வைத்த அறுதிகள்.


முதிர்ந்த கனியின் விதைக்குள்ளும்

உறங்குகின்றன பல கனிகள்.

இறக்கும் மனிதர் வாழ்வேதான்

அவர் அடுத்த தலைமுறைக்கு

இடும் கொடைகள்.

Thursday, August 30, 2018

மெய்த்திருப்பது எதுவோ

நில்லாது நிலையாது
ஓடும் வாழ்வினிலே
காலம் கடந்திடினும்
மாறிலியாய் இருப்பதென்னவோ...

அன்பு, புகழ், செல்வம் என
எல்லாமே மாறுகையில் - எதும்
மாறாதிருக்க வேட்கை கொள்ளல்
நீர்க்குமிழியில் நிரந்தரம் நாடுதலே.

எல்லாம் நீர்க்குமிழியெனில்
எதுவும் மாறுமெனில்
மெய்த்திருப்பதெதுவோ?
மெய்யென்றொன்றுண்டோ?

நீரில் எழுந்து உடையும் வரை
குமிழி மெய் தானே...

இல்லாதிருந்தபின் எழுந்து
பின் உடைந்து இல்லாததாகும்
குமிழி - அது வாழும் வரை
மெய்யன்றோ

உணர்ச்சி உறவு உடமைதனில்
மாறிலிகள் தேடாமல்
கிட்டும் நேரமே அது மெய்யென்று
தாமரையில் தண்ணீராய் இன்புற்று வாழ்ந்திடுவோம்...

Sunday, September 11, 2011

நினைவுகள்...

"தோட்டத்தில் பிடித்த பட்டாம்பூச்சிகள்,
தோழர்களுடன் உடைத்த பம்பரங்கள்,
திருட்டுத்தனமாய்க் கண்ட திரைப்படங்கள்,
திரும்பிப் பார்த்த கன்னியர்கள், ..."
என வளர்ந்த என்
எழுபது வயது தாத்தாவின்
கதைகளில் இல்லாத
"மதிப்பெண்கள்,
கூட பயில்பவரின் பொறாமைகள்,
பாட்டு, நடன போட்டா போட்டிகள்,
நேர்முக தேர்வுகள்"
கூறின
இலக்கற்ற தேடல்களில்
நான் தொலைத்துக் கொண்டிருக்கும்
கணக்கற்ற இன்பங்களின்
எண்ணிக்கை...



Pages