Thursday, August 30, 2018

மெய்த்திருப்பது எதுவோ

நில்லாது நிலையாது
ஓடும் வாழ்வினிலே
காலம் கடந்திடினும்
மாறிலியாய் இருப்பதென்னவோ...

அன்பு, புகழ், செல்வம் என
எல்லாமே மாறுகையில் - எதும்
மாறாதிருக்க வேட்கை கொள்ளல்
நீர்க்குமிழியில் நிரந்தரம் நாடுதலே.

எல்லாம் நீர்க்குமிழியெனில்
எதுவும் மாறுமெனில்
மெய்த்திருப்பதெதுவோ?
மெய்யென்றொன்றுண்டோ?

நீரில் எழுந்து உடையும் வரை
குமிழி மெய் தானே...

இல்லாதிருந்தபின் எழுந்து
பின் உடைந்து இல்லாததாகும்
குமிழி - அது வாழும் வரை
மெய்யன்றோ

உணர்ச்சி உறவு உடமைதனில்
மாறிலிகள் தேடாமல்
கிட்டும் நேரமே அது மெய்யென்று
தாமரையில் தண்ணீராய் இன்புற்று வாழ்ந்திடுவோம்...

9 comments:

Pages