Saturday, May 30, 2020

கண்கட்டு

முகட்டிலிருந்து விழுகிறேன்
முடிவில்லாமல்.
பற்றுதலுக்கேதும் கைவரவில்லை
கண்பிடுங்கும் காரிருள்
நெஞ்சடைக்கும் பேரச்சம்
காற்றாய் ஒரு கரம் கையேந்த
கடவுளோ!
கண்திறக்க முயன்று
கனவு கலைந்தெழுந்தேன்.
மெய்யாயிருந்தவை கனவெனில்
நெடுங்கனவொன்றோ இவ்வாழ்வு.

7 comments:

Pages